Popular Posts

Sunday 5 June 2011

என்னையும் சிரிக்க வைத்தாய்

நான் போன் செய்தும்...
நெடுநேரம் நீ எடுக்கவில்லை
நான் பயந்து போனென்..
அறிமுகமான இரண்டாவது வாரத்திலெயே
போன் செய்தது சரியா? தவறா?
என மனம் குழம்பியது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு
நீயே வந்தாய்
சாப்பிட்டு கொண்டிருந்தேன் என்றாய்
அதனால் என்ன
தாரளமாக பேசிக்கொண்டே
சாப்பிடலாமே என்றேன் .... இல்ல
எப்பவுமே.. எனக்கு எங்க அம்மாதான்
ஊட்டி விடுவங்க என்றாய்..நீ கொடுத்துவைத்தவள் என்றேன் ....
உன் அம்மா நம்பர் குடு
உனக்கும் ஊட்டிவிட சொல்லுகிறேன் என்றாய்....
அதிர்ச்சியில் ஆடித்தான் போனேன்..

வேண்டாம் தாயே..

நீ சொன்னதே..

வயிறு நிரம்பியது என்றேன்..
சிரித்துவிட்டாய்...
என்னையும் சிரிக்க வைத்தாய்..!

No comments: