Popular Posts

Wednesday 29 June 2011

காதலிக்கு ஒரு வேண்டுகோள்..

நீ என்னுடன் பேசிய நாட்களைவிட...
என் கனவில் வந்த நாட்கள்தான் அதிகம் ..
என் காதலியே....

....காத்திருக்கிறேன் மருபடியும்
எப்போது பேசுவாய் என...!

Monday 27 June 2011

மாயமோ.. மந்திரமோ..

அதென்ன...
மாயமோ.. மந்திரமோ..தெரியவில்லை.
ஆண்களும் பெண்களிடம் பேசுகிறார்கள்...
பெண்களும் ஆண்களிடம் பேசுகிறார்கள்.. ஆனால்
காதல் என்னும் நோய் ...
ஆண்களை மட்டும் அதிகம் தாக்குகிறதே...

மருத்துவ பரிசோதனை...

நானும்...
உணர்ச்சியுள்ள ஒரு மனிதன் என்று
உன்னால்தான் இந்த உலகத்திற்கு தெரிந்தது..
உன்னைப் பார்த்த நொடி முதல்
உன்னை காதலிக்க ஆரம்பித்தேன்..
என் அத்தனை..
ஹார்மோன்களும் வேலை செய்தது..
என் அத்தனை...
ஹார்மோன்களும் வேலை செய்கிறது என..
மருத்துவ பரிசோதனையின்றி நிருபிக்கப்பட்டது...!

...................
நன்றி...
காதல் என்னும் நோயை
எனக்கு குடுத்ததற்கு !

Saturday 25 June 2011

சிரிப்பும் அழுகையும் ...

சிரிப்பும் அழுகையும்
என் இரு கண்கள்
இதை என்னிடமிருந்து
பிரிக்க முடியாது......
உன்னை போலவே....!

Friday 24 June 2011

காதலிப்பதற்கான தகுதி....

நீ
அழுவதற்கு
ஆசைப்படுகிறாய் என்றால்....
நீ
காதலிக்க ஆரம்பித்துவிட்டாய்
என்று பொருள்.

Thursday 23 June 2011

ஒரு சந்தர்ப்பம்....

நேற்று கூட...
ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது
என் காதலை....
உன்னிடம் சொல்ல ..!ஆனால்
தயக்கம்...
உன்னிடம் என் காதலை
எப்படி சொல்வதென்று....
....................................
உன்னை விரும்புகிறேன் என்பதா?
உன்னை காதலிக்கிறேன் என சொல்வதா?
உன்னோடு சேர்ந்து
வாழ ஆசைபடுகிறேன் என்பதா?

Wednesday 22 June 2011

அழவைப்பது ......

அழவைப்பது ......
அவள்தான் என தெரிந்தும்
அடம் பிடிக்கிறது மனது...
அவளைத்தான் காண்பேன் என.....!

இரண்டாவது நாளிலே....

பழக ஆரம்பித்த
இரண்டாவது நாளிலே 144 போட்டாய்...
உன்னை வாங்க போங்க...
என்று நான் அழைத்ததற்கு...
இவ்வளவு விரைவில்
என் நேசத்தை
புரிந்துக்கொண்ட உனக்கு....
என் காதலை
புரிந்துக்கொள்ள
இவ்வளவு தாமதம் ஏன்?

Monday 20 June 2011

உன் குல தொழிலா..

மௌனம் என்ன
உன் குல தொழிலா..
-அதை
விட்டுவிடு பெண்ணே...
பிழைத்துப்போகிறென் நான்
இந்த காதல் நோயிலிருந்து...

அழகல்ல.....திமிர்..

அழகான
பெண்களுக்கெல்லாம்
திமிர் இருக்குமென தெரியும்.....
- ஆனால்

உனக்கு கொஞ்சம்
அதிகமாகவே இருக்குதடி....
அழகல்ல.....திமிர்..

Sunday 19 June 2011

எல்லா நோய்க்கும் மருந்து...........

எல்லா நோய்க்கும்
மருந்துண்டாமே.....
சில நோயை தவிர....
எனக்கு ஏற்பட்டிருக்கும்
நோயை விரைவில்
குணப்படுத்திவிடலாமாம் என
உளவியல் நிபுணர்கள்
கூறினார்கள்.....




எந்த மருந்தும் தேவையில்லை...
நீ மட்டும்
எனக்கு சொந்தமானால் போதும் !

Saturday 18 June 2011

இடி...

என் வாழ்வில்
பல பெண்கள்
மின்னலாய் வந்தார்கள்...
மின்னலாய் போனார்கள்-ஆனால்
காதல் என்னும்
"இடி"யை என்னுள்
இறக்கியது நீதான்

Friday 17 June 2011

உன் கண்ணைப்பார்த்தவன் ....

மின்னல் தாக்கி
இறந்தவனும் உண்டு
பிழைத்தவனும் உண்டு- ஆனால்
உன் கண்ணைப்பார்த்தவன்
பிழைத்திருக்க வாய்ப்பில்லை
லேசர் போன்ற கண்கள்
அவனை காயப்படுத்திருக்கும்(மனக்காயம்)

Thursday 16 June 2011

காதல் என்னும் நோய்..

வாய்விட்டு சிரித்தால்
நோய்விட்டு போகுமாம்
யார் சொன்னது...
உன் பளிச்சிடும்
மின்னல் சிரிப்பினால்தானே
காதல் என்னும் நோய்
என்னை தொற்றிக்கொண்டது ....
பெண்ணே......

Wednesday 15 June 2011

தடுமாற்றம் ...

நேற்றுவரை நினைத்ததில்லை...
காரணம் புரியவில்லை
ஏனோ தெரியவில்லை
திடிரென எனக்குள்
ஒரு (தடு)மாற்றம் !

நான் நானாக
இருந்தவரை
இருந்ததில்லை
இந்த தடுமாற்றம் !

நின்னை நினைக்கும்போது
என்னையே மறப்பதாலோ..
என்னவோ..?

முதல் காதல் ..?

முதல் காதல்
எப்போது வருமென யாருக்கும் தெரியாது...
ஆண்களுக்கு ......
வயதுக்கு வந்த பின்பு வரலாம்...
பெண்களுக்கு........
வயதுக்கு வருவதற்கு முன்பே வரலாம்..!

"ஆட்டோகிராப்"

பள்ளியில் ஒரு காதல்...
கல்லுரியில் ஒரு காதல்.
கல்லுரி முடிந்தபின் ஒரு காதல்
கல்யானத்திற்கு பின்
மனைவி/கணவனுடன் ஒரு காதல் என
காதல் எப்போதும் ஒரு "ஆட்டோகிராப்" தான்

அதிர்ஸ்ட்டசாலி..நீ தான்

உலகத்திலேயே...
அதிர்ஸ்ட்டசாலி  நீ தான்..
நான் உன்னை காத்லிப்பதால்....

அதிர்ஸ்ட்டம் இல்லாதவனும் நானே..
நீ  இன்னும் ....
என்னை ஏற்றுக்கொள்ளாததால்....!

Tuesday 14 June 2011

"வெட்கத்தில்"

உன்னை பார்க்கனும் போல இருக்கு
வா டா என்றாய்...
எனக்கிருக்கும்
வேலைப்பளுவிற்க்கு இடையிலும்
உன்னை சந்திக்க வந்தேன்
உன் வீட்டிற்க்கு நான் வந்த சிறிது நேரத்தில்
உன் அன்னை என்னை அழைத்தாள் சாப்பிட....
என் கண்கள் உன்னை நோக்கியது
போய் சாப்பிடு என்றாய்
வந்து பரிமாறு என்றேன் கண்களால்..
"வெட்கத்தில்" உன் தனி அறைக்குள் சென்று ஒளிந்து கொண்டாய்
உன்னை "வெட்கபட" வைத்ததில்
பெருமிதம் கொண்டு
சந்தோசமாய் சாப்பிட சென்றேன் !

மார்ச்-2009

இன்று......
ஒரு மகத்தான நாள்
என் அம்மாவை ..
உன் வீட்டிற்கு அழைத்து வந்தேன்!
உன் அம்மாவிற்கு என் அம்மாவை
அறிமுகபடுத்தி வைத்தாய்.
இன்று தொடங்கியது
ஒரு புது உறவு..

Monday 13 June 2011

காபி சாப்புக்கு

சாலையில் நடக்கும் போது....
கண்ணில்..டீ கடை படும்போதெல்லாம்..
நினைவிற்கு வருகிறது..
நாம் "காபி சாப்புக்கு' போனது...அப்படியே...
காப்பி சாப்பிடாமல் வெளியே வந்ததும் !

Friday 10 June 2011

பேருந்து பயனம்...3/3

உன் கண்களில்...
தாரை தாரையாக கண்ணிர்..
என்னாச்சு என உன் அம்மா வினவினாள்...
அழுவதை தவிர வேறெதுவும் செய்யாமல் நீ..
காலன் நம்மை அழைக்கும் வரை
உன் கண்களில்
கண்ணிர் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற
கற்பனை செய்திருந்த நான்...
உன் கண்ணிரை பார்த்ததும்..
சொல்லாவண்ணம் துயர்கொண்டேன் !

உன் கண்ணிரைக் கண்டதுமே...
என் கண் கலங்க....
கட..கடவென்று சிரிக்க ஆரம்பித்தாய்....
அந்த சிரிப்பில் தெரிந்தது
நான் அழக்கூடாது என்று நீ ஆசைப்படுவதை !
அத்தனையும் பார்த்தபடி
உன் அன்னை..!

பேருந்து பயனம்...2/3

காலையில் வந்து சேர்ந்தேன்
நீ வசிக்கும் ஊருக்கு !
மாலையில் வந்தேன்
உன் வீட்டிற்கு....
என்னைப் பார்த்ததும் சிரித்தாய்...
வரவேற்றாய்...

பேசினோம் நீண்ட நாட்களுக்கு பிறகு..
"டேபிளின்" ஒரு புறம் நான்
"டேபிளின்" இன்னோரு புறம் நீ..
எந்த விரல்கள் வீங்கியது..காட்டு என்றேன்
மலரினும் மெல்லிய ....
உன் பாதங்களை காட்டினாய் !

வீக்கம் அதிகமாகதான் இருந்தது...
ஒரு வேளை சுழுக்கு பிடித்திரும் என்றேன்..
"ஆம்" என்பது போல் தலையசைத்தாய்
சொடுக்கு எடுத்தாள் சரியாகிவிடும் என்று
சொல்லியவாறு....உன் அனுமதி இல்லாமல்..
உன் கால்விரல் பிடித்து அழுத்தினேன்....

சொடுக்கு சத்தத்திற்கு பதில்....
உன் அழுகுரல் சத்தம்தான்  கேட்டது
சத்தம் கேட்டு உன் அன்னை ஒடி வர...
நீ அழுது கொண்டிருக்க....
என் கண்களும் கலங்க தொடங்கியது..........

பேருந்து பயனம்... 1/3

நீ
குளிக்கும் அறைக்குள்
செல்லும் போது
வழுக்கிவிழுந்து.....
உன் கால்களின் விரல்கள்
வீங்கி விட்டதாக அறிந்தேன்.....
..........துடித்தேன்.......
புறப்பட்டேன் உன்னை காண.......!

வழக்கமாக என் பேருந்து பயணத்தில்..
புத்தகங்களே எனக்கு துணையாக வரும்...
இம்முறை உன் நினைவுகள்..!
நீ எப்படி வலி தாங்குவாய்...
நீ எப்படி வலி தாங்குவாய் என
எண்ணியபோதே......
கண்களின் ஓரம் கண்ணிர்துளி..
....அது கண்ணத்திற்கு வருமுன்னே துடைத்தேன்
உன் மேல் நான் எந்த அளவுக்கு
அன்பு வைத்துள்ளேன் என்று உணர்ந்த நாள் இன்று !

நாம் நல்ல நண்பர்கள்...

நாம் நல்ல நண்பர்கள்...
எனக்கு பிடித்த நண்பன்
நீ தான் ..நீ தான் என்று
நாம் பேசும் போதெல்லாம்
சொல்கிறாயே......
எங்கே காதலித்து விடுவோம் என்ற பயத்தில்
ஒவ்வொரு முறையும்
நண்பன் என்கிறாயோ.. !

Thursday 9 June 2011

நீ என்னுடன் பேசாததால்..

எனக்கு கவிதை எழுத
கற்றுக்கொடுத்தவள் நீ....
உறங்கி கொண்டிருந்த
என் கற்பனையை
மீண்டும் ஊற்றெடுக்க காரணம் நீ...
இப்போது
என் கற்பனைதிறன் மங்குகிறது...
நீ என்னுடன் பேசாததால்..

Tuesday 7 June 2011

"கோமாளி" வேசம்...

நான் எதிர்பார்க்காத ஒரு நாள்...
அலைப்பேசி அழைத்தது.....
அழைத்தது நீ என்பதால்....
ஆர்வமாய் எடுத்தேன்.

எப்படி "டா" இருக்க? என்றாய்...
வானில் பறப்பது போல் இருந்தது..!
நீ எப்படி இருகிறாய்..என்றேன்..
முகமெல்லாம் "பரு" இருக்கு டா என..
"சினுங்கினாய்"..

அந்த சினுங்களுக்காகவே...
இன்னொரு முறை எப்படி இருக்கிறாய் என்றேன்..
"டாய்" ய் ய ய் ய்ய் ய்..என இழுத்தாய்..
(இன்பமே..உந்தன் பேர் பெண்மை யோ..)

என் "பரு" போவதற்க்கு ஒரு வழி சொல்லுடா..என்றாய்.
லுஸூ அது "ஆர்மோன்" பிரச்சனை தான் ..
விரைவில் பரு போய் விடும் வருத்தபடாதே....என்றேன்..
ஹ ஹ ஹா ஹா..என விலா எழும்பு நோகும்வரை சிரித்தாய்..
ஏன் பா சிரிக்கிறாய் என்று கேட்டதற்கு...

அது ஆர்மோன் இல்ல."ஹார்மோன்"  என்றாய்...
நீ எல்லாம் எப்படி....
உண்மையைய் சொல் ....
நீ பிட் அடிச்சு தானே..கல்லூரியில் பாஸ் பண்ண என்று...
சொல்லியவறே..சிரித்துக்கொண்டே இருந்தாய்..

இந்த சிரிப்புக்காகவே..
ஒவ்வொரு முறையும்
உன்னிடம்  "கோமாளி" ஆகலாம் என தோன்றுகிறது..!

Sunday 5 June 2011

என்னையும் சிரிக்க வைத்தாய்

நான் போன் செய்தும்...
நெடுநேரம் நீ எடுக்கவில்லை
நான் பயந்து போனென்..
அறிமுகமான இரண்டாவது வாரத்திலெயே
போன் செய்தது சரியா? தவறா?
என மனம் குழம்பியது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு
நீயே வந்தாய்
சாப்பிட்டு கொண்டிருந்தேன் என்றாய்
அதனால் என்ன
தாரளமாக பேசிக்கொண்டே
சாப்பிடலாமே என்றேன் .... இல்ல
எப்பவுமே.. எனக்கு எங்க அம்மாதான்
ஊட்டி விடுவங்க என்றாய்..நீ கொடுத்துவைத்தவள் என்றேன் ....
உன் அம்மா நம்பர் குடு
உனக்கும் ஊட்டிவிட சொல்லுகிறேன் என்றாய்....
அதிர்ச்சியில் ஆடித்தான் போனேன்..

வேண்டாம் தாயே..

நீ சொன்னதே..

வயிறு நிரம்பியது என்றேன்..
சிரித்துவிட்டாய்...
என்னையும் சிரிக்க வைத்தாய்..!

Saturday 4 June 2011

அத்தனையும் நடிப்பா?..

நண்பர்களாக
சென்று கொண்டிருந்த
நம் பயனத்தில்....
காதல் என்னும் கல் தடுக்கி விழுந்தேன்
தூக்கிவிடாமலே.. சென்று கொண்டிருக்கிறாய்
நான் காதலில் விழுந்தது தெரியாதா ?
...   -இல்லை
தெரியாதது போல் நடித்துக்கொண்டிருக்கிறாயா....பெண்ணே!

என்னை மட்டும்..

என்னை பிடிக்கும் என்று
சொல்லிவிட்டாய்.....
என்னை மட்டும் தான்
பிடிக்கும் என்று ....
எப்போது சொல்லபோகிறாய் !

Friday 3 June 2011

கவிபேரரசு...

காதலித்து பார்...
உன்னையே நீ மறப்பாய் என்றான்...
கவிபேரரசு வைரமுத்து !

நான் என்னை மறந்தாலும்...
உன்னை மறக்க மாட்டேன்
பெண்ணே...

உன் மேல்..

களவும் கற்றுமற.....
என்கிறார்கள்......
உன் மேல் எனக்கிருக்கும்
காதலை எப்படி மறப்பது....?