Popular Posts

Tuesday 31 May 2011

மகிழ்ச்சியுடன் முத்தமிட்டேன்..

முத்தமிட ஆசைப்படுகிறேன்.....
உன் முகத்தில்....அதுவும்
நெற்றியில் மட்டும்...! என்றேன்
சரி என்று சொன்னாய்....
மகிழ்ச்சியுடன் முத்தமிட்டேன்..
விடிந்தபின் பார்த்தால்...
கனவு ...இப்படி
கனவில்தான்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
உன்னுடன் நான்.

மறுபடியும் வருவாயா?

கனவில் வந்தாள்....
என் கதாநாயகி இன்று..!
கனவிலும் நினைக்கவில்லை....
நீ கனவில் வருவாய் என்று.
தொலைவில் இருந்தவாறு
தொலைபேசியில் நாமிருவரும் பேசினோம்.
பேசினேன்.....
பேசினாய்..
பேசினோம்......
பேசிக்கொண்டே இருந்தோம்
ஐந்து நிமிடத்திற்கு மேல்...
போதும் என நினைத்தாயோ...
உன் அன்னையிடம் கொடுத்துவிட்டாய்
தொலைபேசியை ;

நீ சிரித்தவாறு பேசியது
நீங்கா இடம் பெற்றுவிட்டது
என் மனதில்...

விடிந்தபின் யோசித்தால்..
என்ன பேசினோம் என்றே தெரியவில்லை...
குழம்பியது என் மனம்
என்ன பேசியிருப்போம் என்று !-ஆனாலும்
நினைவிற்கு வரவில்லை...

மறுபடியும் வருவாயா?
என் கனவில்...
காத்திருக்கிறேன்...!

கனவில் மட்டுமல்ல....

இரவில்.....
நான் உறங்கும் போது..
என் தலையனையை கட்டிபிடித்திருப்பேன்...
உன்னை நினைத்துகொண்டே..!


என்றாவது ஒரு நாள்.....

நீ உறங்கும் போது....

உன் தலையனைக்கு பதில்...

என்னை கட்டிபிடித்திருப்பது போல்...


நினைத்தபடி உறங்கு.....

அன்றே உணர்வாய்...
நம் காதலை..

கனவில் மட்டுமல்ல..
நிஜத்திலும்....!

என் செல்ல பறவையே..



                                                                                         பறவையின் மீதே..
இவ்வளவு பாசத்தை காட்டும் நான்...

என் செல்ல பறவையே...
உன் மீது.......

..........................................
சொல்லத்தான் வேண்டுமோ...?                                                                            

Friday 27 May 2011

அன்பா..? காதலா?..கடவுளா?

படம் ஒன்றே.. போதுமே....
இதற்கு ஒரு ....
கவிதை வேண்டுமோ?

Wednesday 25 May 2011

பருக்கள் ...

நீ என்ன சொன்னாலும் சரி...
என் முகத்தில்
பருக்கள் அதிகமா இருக்கு என
வருத்தப்பட்டாய்.....

அட லுஸூ
நான் உன்னை எப்போதும்
நினைத்து கொண்டே இருகிறேன் என்பதற்கு..
இதைவிட ஒரு சாட்சி உண்டா? என்றேன்...

உன் முகம் சிவந்தது...
அது கோபத்தாலா?..
வெட்கத்தாலா?..என்றுதான் தெரியவில்லை.!

நீ தான் அழகி என்று...


அதிக சந்தோசமோ.....
அதிக துக்கமோ....
அன்று என்னிடம் உரையாடுவாய்...

அன்றொரு நாள்...
என் மனதில்...
உன் நினைவுகள் நிழலாடிய அடுத்த நிமிடமே.
அலைபேசியில்.. என்னை அழைத்தது உன் குரல்

என்னப்பா..? அதிசயமாய் "போன்" என்றேன்..
டே.... நான் "அழகா" இருகேனா?
என வினவினாய்...
அதிலென்ன சந்தேகம் என்றேன்..
இல்ல.. என் முகத்தில் "பரு" இருக்கு
அசிங்கமா இருக்குன்னு...
எல்லாரும் சொல்லுறாங்க......

"லுஸூ" யார் என்ன சொன்னா என்ன? ...
நீ ஆயிரம் முறை கேட்டாலும்...
அழுத்தமாய் சொல்லுவேன்..

நீ தான் அழகி என்று.....(சிரித்தாய்)
........................................




Tuesday 17 May 2011

நிமிடத்திற்கு...."144"


காதலை..
சொல்லாமல் சொல்வது..
"ஹைக்கூ.".. என நினைத்துதான்..
என் காதலை.
சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தேன்
கடந்த இரு வருடமாக...
உன்னிடம்..!

சொல்லாத காதல்..
செல்லாது என..
என் நண்பர்களே...
நகைக்கும் அளவிற்க்கு...
சென்றுவிட்டது என் காதல்...

இனி மேலும் காத்திருப்பதில் பயனில்லை...
அடுத்த முறை..
உன்னை சந்திக்கும் போது...
சொல்லபோகிறேன்...
என் காதலை உன்னிடம்....

இப்போதே துடிக்க ஆரம்பித்துவிட்டது..
என் இதயம்...
நிமிடத்திற்கு...."144" முறை....!

Saturday 14 May 2011

பப்பி...

உன் வீட்டு..."பப்பி"..யை
விரும்பும் அளவுக்கு கூட
என்னை நீ விரும்பவில்லை..
என எண்ணும் போதுதான்
என் மீதே....
எனக்கு வெறுப்பு தோன்றுகிறது..!

Wednesday 11 May 2011

எல்லா பெண்களும்....


சில பெண்களைத் தவிர..
எல்லா பெண்களும்....
காதலித்தவனை
கரம் பிடிக்கதான் யோசிப்பார்கள்...

நீயோ...
என்னை காதலிக்கவே....
யோசிக்கிறாயே...பெண்ணே...!

பொய்யும் மெய்யாகும்...


பொய்யும் மெய்யாகும்...
மெய்யும். .......பொய்யாகும்

இன்பம் துன்பமாகும்...
துன்பமும் ஒரு வித இன்பமாக தெரியும்

காதலியே...கடவுளாக தெரிவாள்...
நாமும் கடவுளாவோம்...

மற்றவர் கொடுக்கும் இனிப்பும்..
தண்ணீர் சுவைதான் தரும்...

காதலியிடம் பெறும் தண்ணீரோ..
இனிப்பிலும் இனிப்பாய் இருக்கும்..

....ஆதலால்...காதலிப்பீர்..!

Tuesday 10 May 2011

காதலில்....!


ஒரு இன்பத்திற்காக...
ஆயிரம் இன்னல்களை...
சந்திக்க வேண்டியிருக்கிறது..
காதலில்....!


முதல் இன்பமே


மனிதனுக்கு...
முதல் இன்பமே
நோயில்லாத வாழ்க்கைதானாம்...
எப்போது  உன்னை பார்த்தேனோ...
அந்த நொடியே...
எனக்கு காதல் நோய் வந்தது..
இதற்கு பின்பும்...
இன்பம் என்ற ஒன்று
என் வாழ்வில் இருகுமா என்ன..?

Saturday 7 May 2011

ஆனாலும்...காதலிக்கிறேன்..!

காதலிக்கிறேன்......
புல்லோடும் ..
பனித்துளியோடும் பேசும்.. பழக்கமில்லை எனக்கு..
ஆனாலும்...காதலிக்கிறேன்..!
இலையோடும்...
பூவோடும் பேசும் பழக்கமில்லை எனக்கு..
ஆனாலும் ...காதலிக்கிறேன்..!
காதல் பாடல்களை..
விருப்பமில்லாமல்தான் கேட்கிறேன்..
ஆனாலும் ..காதலிக்கிறேன்..!
உன்னை பார்க்க வருவதற்க்கு முன்
என்னை நான் அழங்கரித்து கொள்வதில்லை...
ஆனாலும் ..காதலிக்கிறேன்..!
உனக்கு என்னென்ன  பிடிக்கும் ?என
எனக்கு தெரியாது....
ஆனாலும்...
நான் உன்னை காதலிக்கிறேன்......

Friday 6 May 2011

முதல் குறும்செய்தி

காலையில் எழுந்தவுடன்...
முதல் குறும்செய்தி 
உனக்கு அனுப்பிய நொடி ..
உற்சாகமாய் தொடங்கும் அன்றைய பொழுது...
பதில் அனுப்புவாய்..பதில் அனுப்புவாய்..
என காத்திருந்து.....ம்..
உறங்க செல்லும் நேரம்..
ஒரு குறும்செய்தி கூட
நீ அனுப்பவில்லை..என நினைக்கும் போது
இடிந்து போகிறேன்...நான் !

நிர்வாணமும் அழகுதான்..


நிர்வாணமும் அழகுதான்..
பிறக்கும் போதும் நிர்வாணம்..
இறக்கும் போதும் நிர்வாணம்...
இடையில் எதற்க்கு ஆடை..என்பது என் கோணம்