Popular Posts

Monday 28 February 2011

எது நிஜம் ?

நாம் நல்ல நண்பர்கள்...
எனக்கு பிடித்த நண்பன்
நீ தான் ..நீ தான் என்று
நாம் பேசும் போதெல்லாம்
சொல்கிறாயே......
எங்கே காதலித்து விடுவோம் என்ற பயத்தில் ஒவ்வொரு முறையும்
நண்பன் என்கிறாயோ.. !

Sunday 27 February 2011

என்னவளே........

என் காதலை
சொல்லாமல் இருக்கலாம் என்றாலும்
நீ இல்லமால் என்னால் இருக்க முடியாது....
என் காதலை
எப்படி சொல்வது
எங்கே சொல்வது என்று
தெரியாமல் தவிக்கிறேன்

பாராட்டு..

இன்று
என்னிடம்.
ஏ..தேதோ பேசினாய்.....
திரைப்படத்தில் வருவது போல்..
உன்னை பார்த்துக்கொண்டே இருந்தேன்.
புரியாத "மரமண்ட" என்றாய்...
மூளையே இல்லாத "ஜடம்" என்றாய்..
அனைத்தும் கேட்டுக்கொண்டிருந்தேன்..
நீ என்னை பாராட்டுவதாக
நினைத்துகொண்டு......

Darling..........

எனக்கு பிடித்தவையெல்லாம்
உனக்கு பிடிக்கவேண்டும் என்று
அவசியமில்லை..... ஆனால்
உனக்கு பிடித்தது
அத்தனையும்.......
எனக்கு பிடிக்கவேண்டும் என
இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

Saturday 26 February 2011

தவிப்பு

தவிப்பது நான்....
தவிக்க வைப்பது நீ.....
தவிப்பை
தவிர்க்க முடியாமல்
தவிக்கிறேன்...
காரணம் நீ என்பதால்

நீ...

என்னை பிடிக்கும் என்று
சொல்லிவிட்டாய்.....
என்னை மட்டும் தான்
பிடிக்கும் என்று ....
எப்போது சொல்லபோகிறாய் !

முடியாது ?

"முடியாது" என்ற சொல்
என் அகராதியில் இருக்க கூடாது என்றான் மாவீரன் நெப்பொலியன் .
அவனுக்கு என்ன தெரியும்
உன்னை நினைக்காமல்
என்னால் ஒரு நாள் கூட....
இருக்க "முடியாது" என்று !

காதல் மிருகம்

காதல் மிருங்களை
மனிதனாக்கும்........ஆனால்
அவள் என்னை மிருகமாக்கிவிட்டால்....
-ஆம்
அவளுடன் இருந்த நிமிடங்களை
அசைப்போட்டபடி நான்.

புது மொழி

அருகருகே..இருந்தும்
பேசாமல் இருந்தேன்...
எதாவது பேசு என்றாய்...
உன் கண்ணை
பார்த்துக்கொண்டே இருந்தேன்....

என்ன?
என்றாய் கண்களால்.......
சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தேன்...
என் காதலை..!

அழகி

உன் புகைப்படத்தை
எல்லோருக்கும் காட்டிகொண்டிருந்தாய்..
எல்லோரும் விமர்சித்தார்கள்....
என்னிடமும் கேட்டாய்
என் விமர்சனத்தை.....
(மனதிற்குள் நினைத்து கொண்டேன்)


மற்றவர்கள் முன்னால்
உன்னை வர்ணிக்க
மனம் வரவில்லை.....
தனியாக கேள்
தாராளமாய் சொல்லுவேன்
நீ தான் "அழகி' என்று !

தண்ணிர்

தண்ணீரால்
முகம் கழுவிய என்னை....
கண்ணீரால்
முகம் கழுவ வைத்துவிட்டாயே..

அம்மு..

சிறியவர்கள் முதல்
பெரியவர்கள் வரை
உனக்கு பிடித்தவர்கள் அனைவரிடமும்
நீ விளையாடும்
அத்தனை விளையாட்டுகளையும்
என்னிடம் விளையாடு
மறுப்பேதும் சொல்லப்போவதில்லை நான்
-ஆனால்
மௌன விளையாட்டை மட்டும்
என்னிடம் விளையாடாதே......!

காதலியே..

காதலித்து பார்...
உன்னையே நீ அறிவாய் என்றான்...
கவிபேரரசு வைரமுத்து !

நான் என்னை மறந்தாலும்...
உன்னை மறக்க மாட்டேன்
பெண்ணே...

Friday 25 February 2011

கானல் நீர்

காதல் ஒரு
கானல் நீராய் இருந்தது
உன்னை காணும் வரை..

கண்டபின் ...
மகிழ்ச்சி பொங்குகிறது மனதில்
சுனை நீராய் நீ இருப்பதால்....

என்னை பார்த்து
புன்னகைபுரிவாயே....
பரவச உணர்வு எனக்குள் !

உன்னிடம் பேசும்போதுதான்
இதயம் எனக்கு
இருப்பதை உணர்கிறேன்
அத்தனை வேகமாக துடிப்பதால்....

நியாயமா?

களவும் கற்றுமற.....
என்கிறார்கள்......
உன் மேல் எனக்கிருக்கும்
காதலை எப்படி மறப்பது....

பெண்ணே...

நித்தம்.....
நித்தம்...
உன் நினைவால் வாடுகிறேன்.

சத்தம் இல்லாமல்
அனுதினமும்
அழுகிறேன் ....

நீ என்னுடன்
பேசாத நாட்களில்......
பேசிக்கொண்டிருக்கிறேன் உன்னுடன் "டைரியின்" மூலமாகவும்
கனவிலும் !
கணநேரமாவது....
யோசிப்பயா என்னை ?

என் உயிரே...

ஒவ்வொருவரின் பிறப்பிலும்
ஒர் அர்த்தம் உண்டாம்.....
என்னுடைய பிறப்பின்
அர்த்தமே நீதானடி.... 
நீ பார்க்கும் ...
பார்வையின்
அர்த்தம்..
இன்றுவரை
எனக்கு புரியவில்லை..

முதல் சந்திப்பு..

உன்னை சந்தித்தேன்
முதன் முறையாக இன்று...
நன்றாக பேசினாய்.....
எனக்குதான் தயக்கம்
உன்னிடம் பேச...
மகிழ்ச்சி என்றால் என்ன என்று
உணர்ந்த நாள் இது... உன்னை கண்ணோடு
கண்பார்த்த அந்த ஒரு நொடியில்...
நான் மண்ணோடு மண்ணாகிதான் போனேன்.....! 

நிர்வாணம்

நீ பேசாத நாட்களில்.....
என் டைரியின் பக்கங்கள்
நிர்வாணமாகத்தான் காட்சியளிக்கிறது

நினைவுகள்

என் நினைவுகளில்
நிரந்தரமாய் இருக்கிறாய்
நீ......
உன் நினைவுகளில்
நான் ?

கனவில்........

love poem

கனவில் வந்தாள்....
என் கதாநாயகி இன்று..!
கனவிலும் நினைக்கவில்லை....
நீ கனவில் வருவாய் என்று.
தொலைவில் இருந்தவாறு
தொலைபேசியில் நாமிருவரும் பேசினோம்.
பேசினேன்.....
பேசினாய்..
பேசினோம்......
பேசிக்கொண்டே இருந்தோம்
ஐந்து நிமிடத்திற்கு மேல்...
போதும் என நினைத்தாயோ...
உன் அன்னையிடம் கொடுத்துவிட்டாய்
தொலைபேசியை ;

நீ சிரித்தவாறு பேசியது
நீங்கா இடம் பெற்றுவிட்டது
என் மனதில்...

விடிந்தபின் யோசித்தால்..
என்ன பேசினோம் என்றே தெரியவில்லை...
குழம்பியது என் மனம்
என்ன பேசியிருப்போம் என்று !-ஆனாலும்
நினைவிற்கு வரவில்லை...

மறுபடியும் வருவாயா?
என் கனவில்...
காத்திருக்கிறேன்...!