Popular Posts

Saturday 6 August 2011

எதிர்பாராத ஒரு நொடியில்...

படகு சவாரி சென்றோம்....
படகில் ஒரு பக்கம் உன் தாய் தந்தை...
மறுபக்கம் நீயும் நானும்....
(  இரண்டடி இடைவெளியில் )
நடுவில் படகோட்டி....
சிறு அருவி...ஐந்தருவி...என
எல்லா இடமும் சுற்றிகாட்டினான்..படகோட்டி..
அருவியின் அருகே சென்றபோது...
அனைவரும் நனைந்தோம்..
தண்ணீரால் மட்டுமல்ல...
மகிழ்ச்சி வெள்ளத்திலும்தான்..
இடை இடையே...
உன்னையும்....
உன் பெற்றோரையும் நான் போட்டோ எடுக்க...
எதிர்பாராத ஒரு நொடியில்...
ஒரு விநோதமான பாறையை படகோட்டி காட்டினார்..
அதில்  ஒரே நேரத்தில் இருவர் நிற்கும் அளவிற்க்கு இடம் இருக்க..
நீயும் ..நானும் அதற்குள்ளே. செல்ல.
நம் இருவரையும்...சோடியாய்...
உன் தந்தை புகைப்படம் எடுத்தது.....
இன்னும் என் மனதில் நீங்காமல் இருக்கிறது...
உன் நினைவை போல........

7 comments:

சி.பி.செந்தில்குமார் said...

கவித!!!கவித!!!!! அந்த ஃபோட்டோவையும் போடுங்க.. ஹி ஹி

Mathuran said...

நல்லதொரு கவிதை நண்பா

Unknown said...

கவிதைகவிதைகவிதை super

Shiva sky said...

சி.பி.செந்தில்குமார் .........

ஹி ஹீ அது சாமி குத்தம் ஆகிடும்னா..

Shiva sky said...

மதுரன்..



@

வருகைக்கு நன்றி..

Shiva sky said...

"என் ராஜபாட்டை"- ராஜா

@

தங்களின் முதல் குரல்..எனக்கு..நன்றி ராஜா சார்

Shiva sky said...

விக்கியுலகம்


@

பெரிய பெரிய தல எல்லாம் வரிங்க....

வாங்க வாங்க...

நன்றிங்கனா...