Popular Posts

Thursday 25 August 2011

சிரிப்பு.. பயம்... மரியாதை

புறப்படலாம் என..
எழுந்தபோது
உன்னை ஈன்றெடுத்த இரு பிறவிகள்
வீட்டினுல்லே நுழைந்தார்கள்...

சிரிப்புடன்
உன் தாய் தந்தை..
எப்போது வந்தீர்கள் என்ற வினாவோடு..
சிரிப்பு.. பயம்... மரியாதை என அத்தனையும்
என் முகத்தில் சில நொடியில் தோன்றி மறைந்தது

வழக்கமான விசாரிப்புக்கு பின்...
உன் அப்பாவிடமிருந்து விடைபெறும் தறுவாயில்
சாப்பிடு ப்பா என உன் தாய் கூற...
உன் தந்தை அதை வழிமொழிய....
மறுப்பேதும் கூறாமல்
மண்டையை ஆட்டினேன்..
சிரிப்பை அடக்க முடியாமல் நீ சிரித்தாய்...

அரைமணி நேரத்தில் இருமுறை சாப்பிட்டது
இதுதான் முதல்முறை..
உனக்காக ஒரு முறை...
என் வருங்கால மாமனார் மாமிக்காக ஒருமுறை..
ஆம்லேட் வேறு உன் தாய் போட்டுதர..

உன் தந்தை வேகமாக சாப்பிட்டு கொண்டிருக்க...
நான் சாப்பாட்டில் கோலம் போட
( வயிற்றில் இடம் இருந்தாதானே சாப்பிட)
தொண்டைவரை உணவு இருந்ததால்
வாந்தி எடுக்காததுதான் குறை...
டீவியை பார்ப்பது போல்..
என்னை பார்த்து சிரித்துகொண்டிருந்தாய்..
ஒரு வழியாக சாப்பிட்டு எழுந்தேன்...
உங்களிடமிருந்து விடைபெற்றேன்..

No comments: