Popular Posts

Thursday 25 August 2011

உன் படிப்பை பற்றி..


சிறிது நேரம் தொலைக்காட்சி பாரென..
நீ சமையல் அறைக்கு செல்ல...
நான் ஹாலில் அமர்ந்தபடி இருந்தேன்..
மீண்டும் வந்தாய் என் முன்பு..
ஒரு கையில் தட்டும்..மறுகையில் ஹாட் பாக்ஸ்
சாப்பிட்டு சொல் எப்படி இருக்கென..

உன் பூ விரலால் சுட்ட தோசை..
நானும் பூவைப்போலவே
தோசையைமெதுவாக பீய்த்து சாப்பிட்டேன்..
அமிர்தம் நான் சாப்பிட்டதில்லை..
இப்படிதான் இருக்கும் என உணர்ந்தேன்
உன்னால் படைக்கப்பட்ட உணவு என்பதால்..

எப்படி என் சமையல் என்றாய்..
அமிர்தம் என்றேன்..
யார் அந்த அமிர்தம் என்றாய்..
அடிப்பாவி என நான் சொல்ல ....சிரித்தாய்..!

சில நிமிடங்கள் பேசினோம்..
உன் படிப்பை பற்றி..
ஏதோதோ ஆசைகள் உனக்கு...
மேலும் மேலும் படிக்க வேண்டும்...
வேலைக்கு போகனும் என....
( நீ என் வீட்டிற்க்கு மகாராணியாக வந்தால்
  போதும் என்றது என் மனம்.)
சரிப்பா... நான் புறப்படுகிறேன் என சொல்லியவாறு எழுந்தேன்...

5 comments:

Unknown said...

//அமிர்தம் நான் சாப்பிட்டதில்லை..
இப்படிதான் இருக்கும் என உணர்ந்தேன்
உன்னால் படைக்கப்பட்ட உணவு என்பதால்..//
அட அட அட! ரொம்ப அனுபவிச்சு எழுதியிருக்கீங்க போல! :-)

Unknown said...

யார் அந்த அமிர்தம் என்றாய்..
அடிப்பாவி என நான் சொல்ல ....சிரித்தாய்..!//

//
ஹிஹிஹி ரசனை!!கலக்கீட்டீங்க!

Jana said...

உங்கள் தமிழ் பிளாக்கில் கூகுள் அட்சென்ஸ் விளம்பரம் இடம்பெற செய்து நிறைய சம்பாதிக்கலாம். உங்கள் பிளாக்கில் கூகுள் விளம்பரம் இடம்பெற வேண்டுமா? see this blog http://computernanban.blogspot.com/2011/05/blog-post.html

Shiva sky said...

மைந்தன் சிவா @ thanks nanba

Shiva sky said...

ஜீ..@

he h.............h