Popular Posts

Friday 4 March 2011

கண்ணிர்..

காலையில் வந்து சேர்ந்தேன்
நீ வசிக்கும் ஊருக்கு !
மாலையில் வந்தேன்
உன் வீட்டிற்கு....
என்னைப் பார்த்ததும் சிரித்தாய்...
வரவேற்றாய்...

பேசினோம் நீண்ட நாட்களுக்கு பிறகு..
"டேபிளின்" ஒரு புறம் நான்
"டேபிளின்" இன்னோரு புறம் நீ..
எந்த விரல்கள் வீங்கியது..காட்டு என்றேன்
மலரினும் மெல்லிய ....
உன் பாதங்களை காட்டினாய் !

வீக்கம் அதிகமாகதான் இருந்தது...
ஒரு வேளை சுழுக்கு பிடித்திரும் என்றேன்..
"ஆம்" என்பது போல் தலையசைத்தாய்
சொடுக்கு எடுத்தாள் சரியாகிவிடும் என்று
சொல்லியவாறு....உன் அனுமதி இல்லாமல்..
உன் கால்விரல் பிடித்து அழுத்தினேன்....

சொடுக்கு சத்தத்திற்கு பதில்....
உன் அழுகுரல் சத்தம்தான் கேட்டது
சத்தம் கேட்டு உன் அன்னை ஒடி வர...
நீ அழுது கொண்டிருக்க....
என் கண்களும் கலங்க தொடங்கியது..........

No comments: