Popular Posts

Thursday 21 July 2011

சுவிட் கார்ன் சுவையானதா..?

எதாவது சாப்பிடலாமா? என நீ கேக்க....
எது வேணும்னாலும் சாப்பிடலாம் என நான் கூற....
சிரித்துகொண்டே... உன் தந்தையோடு சென்றுவிட்டாய்
( இந்த பெண்கள் சிரிச்சே....கவுத்துடுறாங்க பா..)

உன் பெற்றோர் சினி பால்ஸ்- கு
டிக்கெட் வாங்கி கொண்டு முன்னே செல்ல...
நான் உனக்காக காத்திருக்க...
நீ "சுவிட் கார்ன் " வாங்கி வந்தாய்...
ஒரே டப்பா...ஒரே..ஸ்பூன்.......
நீ கொஞ்சம் சாப்பிட்டதும்...
டேஸ்ட் பாருன்னு குடுக்க.
நாசுக்காய் நான் மறுக்க....

நான் குடுத்தா நீ சாப்பிட மாட்டியானு...
அப்பாவியாய் நீ கேக்க...
( எப்படிதான்....முகத்தை அப்பாவியாய் வச்சிகிறாங்களா...)
...சாப்பிட்டேன் உனக்காகவும்....
.( உன் எச்சில் காகவும்..)
நான் கொஞ்சம் சாப்பிடதும் ..
பிடிங்கி கொண்டாய்...நீ சாப்பிட்டாய்..அதே..ஸ்பூனில்

எப்படி இருந்தது சுவிட் கார்ன் என நீ கேக்க..
சுவிட் கார்னே ரொம்ப சுவிட்டா இருக்கும்...
இதை நீ குடுத்து என்றால்.......
நான் சிரித்துகொண்டே சொல்ல...
"போட" என சொல்லிவிட்டு ஓடிப்போனாய்..
இந்த ஒற்றை சொல்லில்தான் வாழ்கிறது என் காதல் 

( காதல் வளர்த்தேன் பாட்டை பாடிக்கொண்டே...
 உங்களை பின்தொடர்ந்தேன் )

4 comments:

Mathuran said...

ம்ம்... கவிதையால அசத்துறீங்க மாப்பு

பனித்துளி சங்கர் said...

எதார்த்தக் காதல் நவினத்துவத்துடன் இணைந்து நல்ல இருக்கு . வளரட்டும் உங்க காதல்

Shiva sky said...

மதுரன்..@ மிக்க நன்றி

Shiva sky said...

! ❤ பனித்துளி சங்கர் ❤ ...@ உங்கள் ஆசிர்வாதம்