Popular Posts

Friday 29 April 2011

அந்த முன்று நிமிடங்கள் ..

முதன் முறையாக...
உன் தோழிகளுடன் மாயாஜால் சென்றாய்....
எனக்கும் தெரிவித்தாய்...
நீ எதிர்பார்க்காத ஒரு வினாடியில்..
உன் முன்னால் வந்து நின்றேன்...
உன் முகத்தில் எந்தவித அதிர்ச்சியும் தெரியவில்லை.
மாறாக ஒரு புன்னகை  மட்டுமே....
ஒரு வேளை...நான் வருவேன் என்று தெரியுமோ ?

"ஹர்ரர்" ஹவுஸ் சென்றோம்..
ஒரே இருட்டு...
முன்னால் நான் செல்ல...
என்னை தொடர்ந்து நீயும் உன் தொழிகளும்...
பயமுறுத்தும் "ஒலி" கேக்கும் போதெல்லாம்..
என் இதய துடிப்பு...வேகமாக துடித்தது
பயத்தால் அல்ல....
நீ பயந்து என் கரத்தை பிடித்ததால்...

உன் தோழிகள் கூட இருந்தாலும்..
என் கரத்தை நீ பிடித்தாய்..
"இருக" பற்றிக்கொண்டாய் என் கரத்தை..
அந்த "இருக்கத்தில்" தெரிந்தது
என் மீது நீ வைத்துள்ள் "பாசம்"..'அன்பு"..அத்தனையும்!

அந்த முன்று நிமிடங்கள் ..
என் வாழ்வில் ..
நான் மறக்க முடியாத தருணங்கள் !
இப்போது நினைத்தாலும்...
"இன்பமாய்" இனிக்கிறது...!!

No comments: