எல்லா இடமும் சுற்றிய பிறகு
புறப்பட எத்தனித்தோம்...
ஒரு திருப்பத்தில் தனிமையில் நாமிருவரும்..
என் அருகே வந்தாய்..
மிக அருகே நின்றாய்..
உன் மூச்சு காற்று காற்றில் கலந்து
என்னை அடைந்தது...
சிறிது நேரம் உன் மூச்சில் நான் வாழ்ந்தேன்..!
நம்ம ரெண்டு பேருல
உயரமானவங்க யாருன்னு பார்க்கலாம் என
சொல்லியவாறு..கைகள் இரண்டும் உரசியவாறு நின்றாய்..
( இப்ப நான் மூச்சே விடலப்பா...)
திடிரென்று சிறு குழந்தை போல்...
நான் தான் உயரம் என துள்ளினாய்...
உன் துள்ளலையும்..சந்தோசத்தையும்
அமைதியாய் ரசித்துவிட்டு
சற்று நேர இடைவெளியில் உன்னிடம் பேசினேன்...
உன்னைவிட நான் தான் உயரம் என நான் கூற..
இருவருக்கும் வாக்குவாதம் ..தொடர்ந்தது..
( அவங்களைவிட நான் ரெண்டு இன்ச் அதிகம் பா உயரத்தில்)
சரி..நீதான் உயரம் அதிகம்.இப்ப அதுகென்ன என்றேன்..
என்னைவிட அதிக உயரமானவங்ககளைதான்
திருமணம் செய்துகொள்வேன் என்றாய்..
நான் உன்னைவிட உயரம்தான் பா..
உன்னைவிட உயரம்தான் பா..என
இப்போது நான் செல்லமாய் சண்டையிட..
சிரித்தவாறே..இப்ப அதுகென்ன..
என்னமோ நான் உன்ன கல்யாணம் பண்னிகிறேன்னு
சொன்ன மாதிரி குதிக்கிற என்றாய்..
( அடிப்பாவி என்னும் சொல் என் அடி வயிற்றிலிருந்து வந்தது..)
எல்லா ஜென்மத்திலையும் ஆசையை காட்டி..
மோசம் செய்வது பெண்ணின் குணம் என புரிந்தது....!
புறப்பட எத்தனித்தோம்...
ஒரு திருப்பத்தில் தனிமையில் நாமிருவரும்..
என் அருகே வந்தாய்..
மிக அருகே நின்றாய்..
உன் மூச்சு காற்று காற்றில் கலந்து
என்னை அடைந்தது...
சிறிது நேரம் உன் மூச்சில் நான் வாழ்ந்தேன்..!
நம்ம ரெண்டு பேருல
உயரமானவங்க யாருன்னு பார்க்கலாம் என
சொல்லியவாறு..கைகள் இரண்டும் உரசியவாறு நின்றாய்..
( இப்ப நான் மூச்சே விடலப்பா...)
திடிரென்று சிறு குழந்தை போல்...
நான் தான் உயரம் என துள்ளினாய்...
உன் துள்ளலையும்..சந்தோசத்தையும்
அமைதியாய் ரசித்துவிட்டு
சற்று நேர இடைவெளியில் உன்னிடம் பேசினேன்...
உன்னைவிட நான் தான் உயரம் என நான் கூற..
இருவருக்கும் வாக்குவாதம் ..தொடர்ந்தது..
( அவங்களைவிட நான் ரெண்டு இன்ச் அதிகம் பா உயரத்தில்)
சரி..நீதான் உயரம் அதிகம்.இப்ப அதுகென்ன என்றேன்..
என்னைவிட அதிக உயரமானவங்ககளைதான்
திருமணம் செய்துகொள்வேன் என்றாய்..
நான் உன்னைவிட உயரம்தான் பா..
உன்னைவிட உயரம்தான் பா..என
இப்போது நான் செல்லமாய் சண்டையிட..
சிரித்தவாறே..இப்ப அதுகென்ன..
என்னமோ நான் உன்ன கல்யாணம் பண்னிகிறேன்னு
சொன்ன மாதிரி குதிக்கிற என்றாய்..
( அடிப்பாவி என்னும் சொல் என் அடி வயிற்றிலிருந்து வந்தது..)
எல்லா ஜென்மத்திலையும் ஆசையை காட்டி..
மோசம் செய்வது பெண்ணின் குணம் என புரிந்தது....!
4 comments:
Last line very true . . .
Me first
என் ராஜா..நன்றி
//எல்லா ஜென்மத்திலையும் ஆசையை காட்டி..
மோசம் செய்வது பெண்ணின் குணம் என புரிந்தது....!//
இதை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.ஆண்கள் புரிந்து கொள்ளாதவரைக்கும் பெண்ணின் குணம் மோசம்தான்.
Post a Comment