Popular Posts

Saturday 31 March 2012

ஐ லவ் யூ டி .. ஐ மிஸ் யூ டா

விடைபெற்று வந்தேன் உன்னிடமிருந்து.....
நான் ஊருக்கு செல்ல ஆயுத்தமானேன்....
பேருந்து நிலையம் வந்தடைந்தேன்
மிஸ் யூ டா... என்ற உன் குறும்செய்தி வந்தது...
ஆனந்த கண்ணீரின் அர்த்தத்தை உணர்ந்த நாள்..

என் கண்ணீரே சொல்லுமடி...
உன் மேல் எனக்கிருக்கும் அன்பை...என்று
மனதிற்குள் நினைத்து கொண்டேன்

உனக்கு என்ன பதில் அனுப்புவது என....
நினைக்கும்போதே என் நா தழுதழுத்தது...

மறுபடியும் எப்படா என்னை பார்க்க வருவாய் என
உன் அடுத்த குறும்செய்தி...
பொது இடம் எனக்கூட நினைக்காமல்
அழுதேவிட்டேன்...
ஐ லவ் யூ டி என மனதிற்குள் நினைத்துகொண்டு...
ஐ மிஸ் யூ டா என உனக்கு மறுமொழி அனுப்பினேன்.

No comments: